Technical Civil In Tamil

Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


திங்கள், 13 அக்டோபர், 2025

ஆப்பிரிக்காவின் மிக பெரிய 3டி பிரிண்டிங் புராஜெக்ட்

 ஆப்பிரிக்காவின் மிக பெரிய 3டி பிரிண்டிங் புராஜெக்ட்

3D பிரிண்டிங் தொழில்நுட்பம் இந்தியாவில் மெதுவாக இருந்தாலும், வெளிநாடுகளில் இது கட்டுமானத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செலவுகளைக் குறைத்து எளிய பட்ஜெட்டில் வீடுகளைக் கட்ட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தில், கட்டுமானக் கலவையை டேங்கில் நிரப்பி, பிரம்மாண்டமான 3D பிரிண்டர்கள் மூலம் சுவர்கள் மற்றும் தளங்கள் சில மணி நேரங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. இதனால், ஏழை எளிய மக்களுக்கு சுகாதாரமான வீடுகளை அமைப்பதற்கு இது பெரும் உதவியாக உள்ளது. ஆரம்பத்தில், பெரிய 3D பிரிண்டிங் கட்டுமான நிறுவனங்கள் இதை ஒரு இலவச சேவையாகவே வழங்குகின்றன.

இதன் காரணமாக, ஆப்பிரிக்க நாடான கென்யா, வசதி குறைந்த மக்களுக்கு முதல் முறையாக தொடர் வீடுகளை 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டித் தர முடிவு செய்துள்ளது. கென்யா அரசு, '14Trees' என்ற 3D பிரிண்டிங் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து, 1 மற்றும் 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

ஒரு சிறிய 1 படுக்கையறை வீட்டைக் கட்ட வெறும் 4 மணி நேரம் மட்டுமே ஆகும் என்பதால், கென்யா அரசு இந்தத் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. பாரம்பரிய முறைகளைக் காட்டிலும் 4 மடங்கு செலவு குறைவு, தீப்பிடிக்கும் தன்மையற்றது, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதது, மற்றும் குடியிருப்பவர்களுக்கு பாதுகாப்பானது போன்ற பல நன்மைகளைக் கொண்டிருப்பதால், சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குறித்து பேசுபவர்கள், செலவு குறைந்த 3D பிரிண்டிங் கட்டுமான முறையை நாடலாம். இது எதிர்கால கட்டுமானத் துறைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக